தண்ணீர் டிரம்மில் தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழந்த சோகம்

தண்ணீர் டிரம்மில் தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழந்த சோகம்
போலீசார் விசாரணை
பல்லடத்தை அடுத்த பெருந்தொழுவு பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார்.இவருக்கு தேன்மொழி என்ற மனைவியும் நித்திரன்(2) மற்றும் சாரதா இரண்டு என குழந்தைகள் உள்ளனர். வழக்கம் போல் வீட்டின் வெளியே குழந்தை விளையாடிகொண்டு இருந்தது அப்போது அங்கே இருந்த 60 லிட்டர் பிளாஸ்டிக் ட்ரம்மில் குழந்தை நித்திரன் தவறி விழுந்தது.குழந்தையை காணாமல் அக்கம் பக்கம் தேடி பார்த்துவிட்டு செல்வகுமாரின் அப்பா பழனிச்சாமி டிரம்பை பார்த்தபோது குழந்தை இறந்த நிலையில் இருந்தது. உடனே குழந்தையை தூக்கிக்கொண்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு குழந்தையை மருத்துவர் பரிசோதனைசெய்தபோது ஏற்கனவே குழந்தை இறந்து விட்டது தெரிய வந்தது.இந்த சம்பவம் குறித்து அவினாசிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story