கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த 2பேர் கைது!
Thoothukudi King 24x7 |29 Aug 2024 4:00 AM GMT
தூத்துக்குடியில் கத்தியைக் காட்டி மிரட்டி வாலிபரிடம் பணம் பறித்த 2பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து மகன் பெருமாள் (20), இவர் நேற்று இரவு பிரையன்ட் நகர் முதல் தெருவில் நின்று கொண்டு இருந்தபோது அங்கு வந்த 2 பேர் கத்தியைக் காட்டி மிரட்டி அவரது பையில் வைத்திருந்த ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்றுவிட்டார்களாம். இதுகுறித்து தென்பாகம் காவல் நிலையத்தில் பெருமாள் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தூத்துக்குடி அழகேசபுரத்தைச் சேர்ந்த உதயகுமார் மகன் சோலையப்பன் (20), சத்யா நகரை சேர்ந்த முருகன் மகன் சூரிய பிரகாஷ் (20) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story