பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 2 வாலிபர்கள் கைது
Dindigul King 24x7 |30 Aug 2024 2:15 AM GMT
திண்டுக்கல் வேடபட்டியில் பட்டாகத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 2 வாலிபர்கள் கைது
திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் சார்பு ஆய்வாளர் முனியாண்டி மற்றும் காவலர்கள் புதன்கிழமை வேடப்பட்டி, ஆசிரியர் காலனி அருகே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமாக வந்த 2 போலீசாரை கண்டதும் ஓட முயற்சித்தனர். சுதாரித்த போலீசார் 2 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் வேடபட்டி பகுதியைச் சேர்ந்த நாகராஜ் வயது 24, விஜய் வயது 24 ஆகியோர் என்பது தெரிய வந்தது மேலும் அவர்களை சோதனை செய்த போது பட்டாகத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருப்பது தெரியவந்ததை அடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story