கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற 2 வாலிபர்கள் கைது

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற 2 வாலிபர்கள் கைது
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற 2 வாலிபர்கள் கைது
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்த ராமசாமி என்பவரிடம் திண்டுக்கல், நெட்டு தெருவை சேர்ந்த பிரபு(22) மற்றும் அன்பரசன்(21) ஆகிய 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி பணம் பறிக்க முயன்றதாக ராமசாமி நகர் வடக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையில் சார்பு ஆய்வாளர் சரத்குமார் மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட பிரபு, அன்பரசன் ஆகிய 2 பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story