குமரி : ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம் 

குமரி : ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம் 
வேலை வாங்கி தருவதாக மோசடி
குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே உள்ள பேயோடு பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி (62) இவர் அங்குள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் விற்பனையாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மகனுக்கு ஆவினில்  வேலைக்காக  குமரி மாவட்ட ஆவின் இளநிலை நிர்வாகிகள் ஐயப்பன், ஜெயபழனி  ஆகியோரிடம்  30 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால் ரங்கசாமியின் மகனுக்கு வேலை வாங்கி கொடுக்கவில்லை. பணத்தையும்  திருப்பி கொடுக்கவில்லை.       இதையடுத்து ரங்கசாமி நாகர்கோவில் நீதிமன்றத்தில் புகார் செய்தார். புகாரை விசாரிக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தியது.      பின்னர் சென்னையில் உள்ள விசாரணை குழுவினர் அறிக்கையை ஆவின் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து துறை ரீதியான நடவடிக்கை அடிப்படையில், ஐயப்பன் ஜெயபழனி ஆகியோரை பணிநீக்கம் செய்து ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டது.
Next Story