ஆம்பூர் அருகே 2 ஆண் குழந்தைகளை கொலை செய்த நபர் கைது.

ஆம்பூர் அருகே நண்பனின் 2 ஆண் குழந்தைகளை அழைத்துச்சென்று, கொலை செய்து கோவிலின் பின்புறம் வீசிச்சென்ற நபர் கைது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நண்பனின் 2 ஆண் குழந்தைகளை அழைத்துச்சென்று, கொலை செய்து கோவிலின் பின்புறம் வீசிச்சென்ற நபர் கைது. ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் விசாரணை.. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ் இவருக்கு, தர்ஷன் (4) மற்றும் யோகித் (6) என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் யுவராஜின் நண்பரான வசந்த் என்பவர், யுவராஜின் குழந்தைகளை வெளியே அழைத்துச்சென்று திண்பண்டங்கள் வாங்கி தருவது வழக்கம், இந்நிலையில் அதே போல் வசந்த் நேற்று மாலை வசந்த் 2 குழந்தைகளையும் கடைக்கு அழைத்துச் செல்வதாக கூறி அழைத்துச்சென்றுள்ளார்.. அதனை தொடர்ந்து இரவு வெகு நேரம் ஆகியும் வசந்த் மற்றும் 2 குழந்தைகள் வீடு திரும்பாததால் அச்சமடைந்த குழந்தைகளின் பெற்றோர் உடனடியாக இதுகுறித்து, ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர், புகாரின் பேரில் குழந்தை காணாமல் போனது குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வந்த போது, காணாமல் போன இரண்டு குழந்தைகளும், வேலூர் மாவட்டம். சிங்கல்பாடி அடுத்த ஏரிப்பட்டி செங்காத்தம்மன் கோவிலின் பின்புறம் சடலமாக இருப்பதாக காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா தலைமையிலான காவல்துறையினர் , ஏரிப்பட்டி பகுதியில் உள்ள செங்காத்தம்மன் கோவிலின் பின்புறம் சடலமாக கிடந்த இரண்டு குழந்தைகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. அதனை தொடர்ந்து, குழந்தைகளை கடைக்கு அழைத்து செல்வதாக கூறி அழைத்து சென்று கொலை செய்த வசந்த் என்பவரை கைது செய்து, அவரிடம் மேலும் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். மேலும் நண்பனின் 2 ஆண் குழந்தைகளை கடைக்கு, அழைத்துச்சென்று, குழந்தைகளை கொலை செய்து கோவிலின் பின்புறம் வீசிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
Next Story