உடைந்த பீர்பாட்டிலை காட்டி கொலை மிரட்டல் விடுத்து பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது

உடைந்த பீர்பாட்டிலை காட்டி கொலை மிரட்டல் விடுத்து பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது
திண்டுக்கல் அருகே வாலிபரிடம் உடைந்த பீர்பாட்டிலை காட்டி கொலை மிரட்டல் விடுத்து பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது
திண்டுக்கல், வத்தலகுண்டு பைபாஸ், கருப்பண்ணசாமி கோவில் அருகே சரவணன் என்பவர் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த திண்டுக்கல் பாறைப்பட்டி பகுதியை சேர்ந்த சுபாஷ் (24), அரவிந்த்(23) ஆகிய இருவரும் தாங்கள் பெரிய ரவுடி, தங்கள் மீது காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன என்று கூறி உடைந்த பீர்பாட்டிலை சரவணன் கழுத்தில் வைத்து கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி பணம் பறித்ததாக சரவணன் தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் அமுதா, சார்பு ஆய்வாளர் அருண் நாராயணன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட சுபாஷ், அரவிந்த் ஆகிய 2 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story