சின்னாளபட்டியில் திடீர் சோதனை, 2 கடைகளுக்கு சீல்

சின்னாளபட்டியில் திடீர் சோதனை, 2 கடைகளுக்கு சீல்
சின்னாளபட்டியில் போலீசார் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இணைந்து திடீர் சோதனை, 2 கடைகளுக்கு சீல்
திண்டுக்கல், சின்னாளபட்டியில், பள்ளி மாணவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பயன்படுத்தும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் அம்பாத்துரை காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சி தலைமையிலான போலீசார், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஜாபர்சாதிக் தலைமையிலான அதிகாரிகள் இணைந்து சின்னாளப்பட்டி பகுதியில் உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் வைத்தனர். மேலும் சில கடைகளில் குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story