தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
குளித்தலை போலீஸ்கார வழக்கு பதிவு
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நச்சலூர் கடைவீதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற குளித்தலை போலீசார் லாட்டரி சீட்டு விற்ற சக்திவேல் (49), சுப்பிரமணியன் (56) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 20 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ. 270 பறிமுதல் செய்துள்ளனர்.
Next Story