கஞ்சா விற்பனை: 2 சிறுவர்கள் கைது

கஞ்சா விற்பனை: 2 சிறுவர்கள் கைது
தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை: 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுத்தனர்.
தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 சிறுவர்களை போலீசார் கைது செய்து, 1.25 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.  தூத்துக்குடியில் வடபாகம் காவல் உதவி ஆய்வாளர் சிவராஜா தலைமையிலான போலீசார் 1ஆம் ரயில்வே கேட் பகுதியில் ரோந்து சென்றனர். அவர்களைப் பார்த்ததும் அங்குள்ள மண்டபம் அருகே நின்றிருந்த 4 பேரில் இருவர் தப்பியோடினராம். மற்ற இருவரை போலீசார் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் சிறுவர்கள் என்பதும், 1.25 கிலோ கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்ததும் தெரியவந்தது. போலீசார் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய இருவரைத் தேடிவருகின்றனர்.
Next Story