உடுமலைப்பேட்டை அருகே பள்ளி மாணவி மற்றும் 2 இளைஞர்கள் குளத்திலிருந்து சடலமாக மீட்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே பள்ளி மாணவி மற்றும் இரண்டு இளைஞர்கள் குளத்திலிருந்து சடலமாக மீட்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த குறிச்சிகோட்டையை சார்ந்த 16 வயதான பள்ளி மாணவி தர்சனா என்பர் கடந்த டிசம்பர் 18ஆம் தேதி காணமல் போனதாக தளி காவல் நிலையத்தில் புகார்கொடுக்கபட்ட நிலையில் தர்சனா மற்றும் சென்னையை சார்ந்த 19 வயதான ஆகாஸ், குறிச்சிகோட்டையை சார்ந்த 20 வயதான மாரிமுத்து ஆகிய மூவர் சடலங்கள் குளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளன. குறிச்சிக்கோட்டை பகுதியைச் சார்ந்த நாகராஜ் என்பவரின் மகள் தர்ஷனா கடந்த டிசம்பர் 17ஆம் தேதி காணாமல் போன நிலையில் 18ஆம் தேதி தளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது. புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் தர்ஷனாவை தேடி வந்த நிலையில் குறிச்சி கோட்டை அடுத்த மானுப்பட்டி பகுதியில் சாலை ஓரம் உள்ள குளத்தில் மூன்று சடலங்கள் மிதப்பதாக பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் சடலத்தை மீட்டபோது அது காணாமல் போன தர்ஷனா என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவருடன் ஆகாஷ் மற்றும் குறிச்சிகோட்டையைச் சேர்ந்த மாரிமுத்து ஆகியோர் சடலங்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது மூவரும் நிலை தடுமாறி குளத்தில் விழுந்து இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் பல்வேறு கோணங்களில் இது குறித்து அமராவதி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story