பொறியியல் பணி காரணமாக விழுப்புரம் வரும்: 2 ரயில்கள் முழுமையாக ரத்து

X
வேலூா் மாவட்டம், காட்பாடி யாா்டில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், ஒரு ரயில் பகுதியளவிலும், 2 ரயில்கள் முழுமையாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.அதன்படி, விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து இரவு 7.10 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - காட்பாடி பயணிகள் ரயில் (வ.எண்.66026) பிப்ரவரி 10, 12, 14 ஆகிய தேதிகளில் வேலூா் கண்டோன்மென்ட் - காட்பாடி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்த ரயில் விழுப்புரத்திலிருந்து வேலூா் கண்டோன்மென்ட் வரை மட்டுமே இயக்கப்படும்.இதுபோன்று, சென்னை கடற்கரையிலிருந்து மாலை 6 மணிக்குப் புறப்படும் சென்னை கடற்கரை - திருவண்ணாமலை பயணிகள் ரயில் (வ.எண்.66033) பிப்ரவரி 10,12,14 ஆகிய தேதிகளிலும், திருவண்ணாமலையிலிருந்து அதிகாலை 4.30 மணிக்குப் புறப்படும் திருவண்ணாமலை - தாம்பரம் பயணிகள் ரயில் (வ.எண்.66034) பிப்ரவரி 11,13,15 ஆகிய தேதிகளிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

