சேலத்தில் மின்சார கம்பி திருடிய 2 வாலிபர்கள் கைது

X
சேலம் கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் முகமது நாசே பாஷா. இவர் அந்த பகுதியில் சிமெண்டு கற்கள் விற்பனை கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடையில் இருந்த ரூ.20 ஆயிரம் மதிப்பிலான மின்சார கம்பி திருட்டு போனது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அந்த கடையில் திருடியது வீரபாண்டியை சேர்ந்த மோகன்பாபு (வயது 27), விஜயரட்சகன் (20) ஆகியோர் என தெரியவந்ததை அடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
Next Story

