ஆலங்குளம் அருகே இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் கைது

X
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே துத்திகுளம் தெற்கு காலனியைச் சோ்ந்த சூசைமுத்து மகன் நெல்சன்(35). இவருக்கும், பக்கத்து வீட்டைச் சோ்ந்த குமாா் மகன் மாரிவேல்(26) என்பவருக்குமிடையே குடும்பத் தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்ததாம். சில தினங்களுக்கு முன்னா் மாரிவேல் வீட்டில் நெல்சன் கல் எறிந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். இந்நிலையில் மாரிவேலின் மனைவியை நெல்சன் அவதூறாக பேசினாராம். இதில் ஆத்திரமடைந்த மாரிவேல், தனது உறவினரானகுலசேகரப்பட்டி பழனிசாமி மகன் மணிகண்டன்(28) ஆகிய இருவரும் நெல்சனை தாக்கியதுடன், அவரது வீட்டு ஜன்னலையும் உடைத்து சேதப்படுத்தினராம். இதில், காயமடைந்த நெல்சன் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவா் அளித்த புகாரின்பேரில், ஆலங்குளம் போலீஸாா் மாரிவேல், மணிகண்டன் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
Next Story

