நெமிலி அருகே கிணற்றின் மூழ்கி +2 மாணவன் பலி!

நெமிலி அருகே கிணற்றின் மூழ்கி +2 மாணவன் பலி!
X
கிணற்றின் மூழ்கி +2 மாணவன் பலி!
நெமிலியை அடுத்த புன்னை கிராமத்தை சேர்ந்தவர் தணிகாசலம், கூலித்தொழிலாளி. இவரது இளைய மகன் சிதம்பரம். சிதம்பரம் நெமிலி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். தற்போது பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. அதனால் மாணவர் சிதம்பரம் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் நண்பர்களுடன் வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அங்கு கிணற்றின் மேல்பகுதியில் இருந்து குதித்துள்ளார். இதில் தண்ணீருக்குள் சென்ற சிதம்பரம் மீண்டும் மேலே வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் அவரை தேடத்தொடங்கினர். நீண்ட நேரம் தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து சிதம்பரத்தின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட் டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அரக்கோணம் தீயணைப்பு வீரர்கள், மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணிநேரம் போராடி மாணவரை பிணமாக மீட்டனர். தொடர்ந்து உடலை பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து நெமிலி போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்வு எழுதிவிட்டு நண்பர்களுடன் குளிக்கச் சென்ற மாணவர் கிணற்றில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story