மணப்பாறை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

மணப்பாறை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
X
மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த காட்டையம்பட்டியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 34). இவர் நேற்று முன்தினம் இரவு பெரிய சமுத்திரம் ஜே.பி. நகரைச் சேர்ந்த பாலா என்ற பாலசுப்பிரமணி (32), காந்தி நகரைச் சேர்ந்த மதன்பாபு ஆகியோருடன் ஒரு மோட்டார் சைக் கிளில் சென்று கொண்டிருந்தார். திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ் சாலையில் மணப்பாறையை அடுத்த மரவனூர் கொட்டப்பட்டி பிரிவு சாலை அருகே சென்றபோது, பின்னால் வந்த கார், மோட்டார் சைக் கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அவர்களில் சதீஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மணப்பாறை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக் குப்பின் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பாலசுப்பிரமணி நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதன்பாபு மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முன்னதாக விபத்து பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த சதீசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
Next Story