மோசடி : 2 பேர் மீது வழக்கு

மோசடி : 2 பேர் மீது வழக்கு
X
வெளிநாடு அனுப்புவதாக
நாகர்கோவில் இடலாக்குடி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் மனைவி அனுஷா மோள் ( 29). இவர் நாகர்கோவில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட் எண் 1ல் ஒரு புகார் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தனது கணவர் சதீஷ்குமார் ஹோட்டல் மேனேஜ்மென்ட் முடித்துவிட்டு உள்ளூரில் வேலை பார்த்து வந்தார். அவர் வெளிநாடு செல்ல முயற்சித்து இருந்தார்.        இந்த நிலையில் உறவினர் ஒருவர் மூலம் கன்னியாகுமரி லூர்து மாதா தெரு மெர்சி (31),  வெட்டூர்ணிமடத்தை சேர்ந்த பெபின் சாம் ( 34) ஆகியோரின் ஆறுமுகம் கிடைத்தது. அவர்கள் எனது கணவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக  கூறினர்.       இதற்காக ரூ. 5 லட்சத்து 50 ஆயிரம்  பணம் பெற்றனர். ஆனால் வெளிநாட்டுக்கு அனுப்பாமல் மோசடி செய்தனர். பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றினார்கள். எனவே இது ஒரு விசாரிக்க உத்தரவிட வேண்டும் என கூறி இருந்தார்.        இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில் கோட்டாறு போலீசார் தற்போது விசாரணை நடத்தி மெர்சி மற்றும் பெபின் சாம் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story