போலி லாட்டரி சீட்டு விற்ற 2 நபர்கள் கைது

X
Komarapalayam King 24x7 |23 March 2025 9:10 PM ISTகுமாரபாளையத்தில் போலி லாட்டரி சீட்டு விற்ற 2 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் போலி லாட்டரி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. தங்கவடிவேல், எஸ்.ஐ. நடராஜன் ஆகியோர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். ராஜராஜன் நகர், கொத்துக்காரன்காடு ஆகிய பகுதிகளில் போலி லாட்டரி விற்பது தெரியவந்தது. நேரில் சென்ற போலீசார், வெள்ளை தாள்களில் நம்பர்கள் எழுதி, போலி லாட்டரி விற்ற ஜெகதீசன், 45, லோகேஷ், 25, ஆகிய இருவரை கைது செய்து, அவர்களிடமிருந்து நம்பர்கள் எழுதப்பட்ட வெள்ளை தாள்கள் தலா 5 வீதம் பறிமுதல் செய்யப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story
