ஏற்காட்டில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய 2 பேர் கைது

ஏற்காட்டில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய 2 பேர் கைது
X
போலீசார் நடவடிக்கை
ஏற்காடு மேல் அழகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிலம்பரசன் (வயது32), பிரவீன்குமார் (28). இவர்கள் சேர்வராயன் கோவில் பகுதியில் நேற்று முன்தினம் மது அருந்தி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த பகுதியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் ரோந்து சென்றார். பொது இடத்தில் மது அருந்த கூடாது என சப்-இன்ஸ்பெக்டர், அவர்களிடம் கூறி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் 2 பேரும், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தகாத வார்த்தையால் திட்டி தாக்கி உள்ளனர். இது தொடர்பாக ஏற்காடு போலீசில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசன், பிரவீன்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
Next Story