சேலம் மாவட்டத்தில், 2-ந் தேதி முதல் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி

X
சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- கோமாரி நோய் என்பது இரட்டை குளம்பின கால்நடைகளை தாக்கி காய்ச்சல் மற்றும் கொப்புளங்கள் ஏற்படுத்தும் நச்சுயிரி தொற்று நோய் ஆகும். பண்ணையில் சுகாதாரமற்ற பராமரிப்பு, பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், உமிழ்நீர் மற்றும் கழிவுகள் மூலம் இந்த நோய் எளிதில் பரவுகிறது. கோமாரி நோயினால் மாடுகள் சினைபிடிக்காமல் போவது, பால் உற்பத்தி குறைதல், தோல் மற்றும் தோல் பொருட்களின் மதிப்பு இறக்கம், எருதுகளின் வேலைதிறன் பாதிப்பு, கன்றுகளில் அதிக இறப்பு ஆகியவை ஏற்படுகிறது. இந்த நோயை தடுக்கும் வகையில் கால், வாய் நோய் தடுப்புத்திட்டத்தின் கீழ் 6 மாதங்களுக்கு ஒருமுறை அனைத்து கால்நடைகளுக்கு தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில் வருகிற 2-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை அனைத்து கால்நடைகளுக்கும் இலவசமாக 7-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது. எனவே கால்நடை வளர்ப்போர் தங்களது கால்நடைகளை கொண்டு வந்து இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொண்டு பயன்பெற்று கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story

