ஆட்டையாம்பட்டி அருகே 2-வது திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

ஆட்டையாம்பட்டி அருகே 2-வது திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை
X
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே இனோம் பைரோஜி கிராமம் ஆலத்திக்காடு பகுதியை சேர்ந்தவர் சந்தியா (வயது 21). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணமான 15 நாட்களிலேயே சந்தியா கணவரை பிரிந்து தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். அதன்பிறகு கடந்த 2 வருடங்களுக்கு முன் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த முருகன் என்பவரை அவர் 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பின் கணவர் வீட்டில் வசித்து வந்த சந்தியா, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்டையாம்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்தார். அப்போது சந்தியாவுக்கு மீண்டும் அவரது முதல் கணவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த முருகன் சந்தியாவை கண்டித்துள்ளார். இதனால் முருகனுக்கும் சந்தியாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதேபோல் நேற்றும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனையில் இருந்த சந்தியா நேற்று தனது தாய் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து வந்த ஆட்டையாம்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story