பைக் - கார் விபத்து: 2 மாணவர்கள் பலி

பைக் - கார் விபத்து: 2  மாணவர்கள்  பலி
X
பூதப்பாண்டி
குமரி மாவட்டம் ஈசாந்தி மங்கலம் பகுதியை சேர்ந்தவர் பாபு இவரது மகன் அபிஷேக் (18) இவர் நாகர்கோவிலிலுள்ள ஒரு கல்லூரியில் ஐடிஐ படித்து வருகிறார். இவரும் இவருடைய நண்பர் ஆகாஷ் நாவல்காட்டிலிருந்து துவரங்காடு நோக்கி பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயலும் போது எதிரே வந்த சொகுசு காரில் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் அபிஷேக் மற்றும் ஆகாஷ் ஆகிய இருவரும் பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். காயம் பட்ட இருவரையும் பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் அபிஷேக் ,ஆகாஷ் இறந்தனர். பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்
Next Story