சேலத்தில் இரும்பு கம்பிகள் திருட முயன்ற 2 வாலிபர்கள் கைது

X
சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 54), கட்டிட ஒப்பந்ததாரர். இவர் கட்டிட பணிக்கு தேவையான இரும்பு கம்பிகள் உள்பட பொருட்களை காளியம்மன் கோவில் தெருவில் உள்ள குடோனில் வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று குடோனில் இருந்த இரும்பு கம்பிகளை 2 பேர் திருட முயன்றனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை பிடித்து சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதில் அவர்கள் அழகாபுரம் தோப்புக்காடு பகுதியை சேர்ந்த வீரராகவன் (வயது 23), முகமது ஷாருக்கான் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

