சிறுமியை கர்ப்பமாக்கியதாக 2 இளைஞர்கள் கைது!

X
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே எட்டாம் வகுப்பு படித்து வரும் 12 வயது சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின்பேரில், திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மகாலட்சுமி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார். அதில், அதே பகுதியைச் சேர்ந்த ரிசோ (25), ராவிட் (25) ஆகியோர் சேர்ந்து ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாகியது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
Next Story

