போக்சோ வழக்கில் பெண் உட்பட 2பேருக்கு சிறை தண்டனை:

X
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2024ம் ஆண்டு 17 வயது சிறுமியை கோவில்பட்டி மேட்டுதெருவை சேர்ந்த கனகராஜ் மனைவி கவிதா (25) என்பவர் பாலியல் தொந்தரவு செய்தும், அதே சிறுமியை தூத்துக்குடி பூபாண்டியபுரத்தைச் சேர்ந்த ஆத்தியப்பன் மகன் தங்கதுரை (41) என்பவர் பாலியல் வன்கொடுமையும் செய்த வழக்கில் மேற்படி இருவரையும் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பீரித்தா நேற்று குற்றவாளி கவிதா என்பவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.5,000 அபராதமும், குற்றவாளி தங்கதுரைக்கு 20 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.10,000/- அபராதமும் தீர்ப்பு வழங்கினார்.
Next Story

