வேப்பனப்பள்ளி: அரசுப் பஸ் மீது டூவீலர் மோதி 2 பேர் பலி.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி யிலிருந்து பேரிகை நோக்கி நேற்று அரசுப் பஸ் யானைகால்தொட்டி பிரிவு சாலை அருகே சென்ற போது எதிரே வந்த டூவீலரில் பஸ் மீது மோதியது. இதில் கிருஷ்ணகிரி விற்பனையாளர் மணிவண்ணன் (65), கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம் கொரமடுகுவைச் சேர்ந்த முரளி (43) ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து வேப்பனப்பள்ளி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

