பணம் பறிக்க முயற்சி செய்த 2 இளைஞர்கள் கைது

பணம் பறிக்க முயற்சி செய்த 2 இளைஞர்கள் கைது
X
திண்டுக்கல்லில் வாலிபரிடம் உடைந்த பீர் பாட்டிலை காட்டி கொலை மிரட்டல் விடுத்து பணம் பறிக்க முயற்சி செய்த 2 இளைஞர்கள் கைது
திண்டுக்கல்லை சேர்ந்த லோகநாதன் என்பவர் மேட்டுப்பட்டி பேட்டை ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மேட்டுப்பட்டி சேர்ந்த பானை (எ) மகேந்திரன்(29), ஆரோக்கிய கிளின்டன்(27) ஆகிய இருவரும் உடைந்த பீர் பாட்டிலை காட்டி கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி பணம் பறிக்க முயற்சி செய்ததாக அளித்த புகாரின் பேரில் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் சார்பு ஆய்வாளர் முனியம்மாள் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story