கோவை தொண்டாமுத்தூரில் அட்டகாசம் செய்யும் ரோலக்ஸ் காட்டு யானை – கட்டுப்படுத்த 2 கும்கி யானைகள் வரவு!

தொண்டாமுத்தூரில் ‘ரோலக்ஸ்’ யானை அட்டகாசம் – முத்து, நரசிம்மன் கும்கிகள் களமிறக்கம்.
கோவை, தொண்டாமுத்தூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக விவசாய நிலங்கள், வீடுகள், கடைகள் ஆகியவற்றை சேதப்படுத்தி வந்த ரோலக்ஸ் என அழைக்கப்படும் ஒற்றை காட்டு யானையை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். பொள்ளாச்சி டாப்ஸ்லிப் முகாமிலிருந்து முத்து மற்றும் நரசிம்மன் என்ற 2 கும்கி யானைகள் நேற்று தாளியூர் அருகே கொண்டு வரப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளன. இவை ரோலக்ஸை கண்காணித்து ஊருக்குள் புகுந்து சேதம் செய்வதைத் தடுக்கவுள்ளதாகவும், தேவையானால் மடக்கிப் பிடித்து வனப்பகுதிக்குள் அனுப்பும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டதை அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் நிம்மதியுடன் வரவேற்றுள்ளனர்.
Next Story