தவெக விஜய் வாகன ஓட்டுநர் மற்றும் 2- இருசக்கர வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்த வேலாயுதம்பாளையம் காவல்துறை.

தவெக விஜய் வாகன ஓட்டுநர் மற்றும் 2- இருசக்கர வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்த வேலாயுதம்பாளையம் காவல்துறை.
தவெக விஜய் வாகன ஓட்டுநர் மற்றும் 2- இருசக்கர வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்த வேலாயுதம்பாளையம் காவல்துறை. கடந்த 27- ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக நாமக்கல்லில் இருந்து கரூர் வரும் வழியில் கரூர் மாவட்ட எல்லையான தவிட்டுப்பாளையம் பகுதியில் விஜய்க்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்பொழுது விஜய் வாகனம் சென்று கொண்டிருந்தபோது அதன் மீது மோதுவது போல் அஜாக்கிரதையாக இருவர் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்று கீழே விழுந்தனர். லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இதையடுத்து கரூர் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் விஜய் வாகனத்தின் ஓட்டுனர் மற்றும், இருசக்கர வாகனங்கள் ஓட்டிச் சென்ற இருவர் என மொத்தம் மூன்று பேர் மீது அதிவேகத்தில் செல்வது மற்றும் கவன குறைவாக வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக விஜய் பிரச்சார வாகனம் இருசக்கர வாகனங்களில் மீது மோதி விபத்து தொடர்பாக உயர் நீதிமன்றம் உத்தரவை தொடர்ந்து விஜயின் வாகன ஓட்டுனர் மற்றும் FZ பைக் ஓட்டுநர் சந்துரு மற்றும் பல்சர் வாகனத்தை ஓட்டி வந்த அடையாளம் தெரியாத நபர் என மூன்று பேர் மீது வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story