சிறுமி கழுத்தில் கிடந்த 2-1/2 பவுன் சங்கிலி திருட்டு

சிறுமி கழுத்தில் கிடந்த 2-1/2 பவுன் சங்கிலி திருட்டு

திருட்டு 

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் சிறுமியிடம் இரண்டரை பவுன் தங்க சங்கிலி திருடப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆலங்குடி எழில் நகரை சேர்ந்தவர் நடேசன் மனைவி ரேவதி இவரது மகள் அனுஷ்கா இந்நிலையில் நேற்று அனுஷ்காவை அழைத்து கொண்டு அவரது தாத்தா புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடிக்கு தனியார் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர்.

ஆலங்குடியில் பஸ்சில் இருந்து இறங்கிய போது சிறுமி கழுத்தில் கிடந்த 2-1/2 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story