பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் 2 ஊராட்சிகளில் 140 'சிசிடிவி' கேமரா அமைப்பு

பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் 2 ஊராட்சிகளில் 140 சிசிடிவி கேமரா அமைப்பு
X
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கருப்படிதட்டடை, வைப்பூர் ஆகிய இரண்டு ஊராட்சிகளில், பல்வேறு இடங்களில் 140 'சிசிடிவி' கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கருப்படிதட்டடை, வைப்பூர் ஆகிய இரண்டு ஊராட்சிகளில், பல்வேறு இடங்களில் 140 'சிசிடிவி' கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கிராம ஊராட்சிகளின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், ஊராட்சி நிர்வாகங்களும், தங்கள் நிதி நிலைமைக்கு ஏற்ப, கண்காணிப்பு கேமராக்களை பொருத்துகின்றன. அந்த வகையில், காஞ்சிபுரம் ஒன்றியம், கருப்படிதட்டடை ஊராட்சி முழுதும் உள்ள முக்கிய சாலை சந்திப்புகளில், 126 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து கருப்படிதட்டடை ஊராட்சி தலைவர் பொன்னா கூறியதாவது: ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் சட்டம் - ஒழுங்கு பாதுகாக்கவும் குற்ற செயல்களை தடுக்கும் வகையிலும், குற்ற செயலில் ஈடுபடுவோரை எளிதில் அடையாளம் காணும் வகையில், கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு வருகின்றன. கருப்படிதட்டடை ஊராட்சி எல்லை பகுதியான அரக்கோணம் சாலை, கரியன் கேட், ஒலிமுகமதுபேட்டை, பஞ்சுபேட்டை மின்வாரிய அலுவலகம்,உள்ளிட்ட முக்கிய சாலை சந்திப்புகளில் மொத்தம் 126 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
Next Story