ஜெயங்கொண்டம் பகுதியில் 2 சக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது

ஜெயங்கொண்டம் பகுதியில் 2 சக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்தனர்.
அரியலூர், ஜூன்.26- அரியலூர் - ஜெயங்கொண்டம் விக்கிரமங்கலம் கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் நான்கு மற்றும் இரு சக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது வாகனங்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் கடந்த சில தினங்களாகவே இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடு போகும் சம்பவம் குறித்து போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து போலீசார் பல்வேறு பகுதிகளில் சோதனைகளில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஜெயங்கொண்டம் அருகே மகிமைபுரம் பகுதியில் ஜெயங்கொண்டம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக அவ்வழியாக ஒரே வாகனத்தில் வந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதையடுத்து போலீசார் சந்தேகத்தின் பேரில் இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்த போது ஜெயங்கொண்டம் பகுதியில் பல்வேறு இடங்களில் இரு சக்கர வாகனங்களை திருடியதைப் ஒப்புக் கொண்டுள்ளனர். அவர்கள் எடுத்து வந்த வாகனமும் திருட்டு வாகனம் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி தாலுக்கா கண்டமங்கலம் வெட்டுவாய்க்கால் தெருவை சேர்ந்த விக்னேஷ் (26) மற்றும் அரியலூர் மாவட்டம் தழுதாழைமேடு காலனி தெருவை சேர்ந்த ராஜவேல் (22) என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் விக்ரமங்கலம், கும்பகோணம், திருப்பனந்தாள் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்களிடமிருந்து ஜெயங்கொண்டத்தில் திருடப்பட்ட 2 இரு சக்கர வாகனம் மற்றும் விக்ரமங்கலம் கும்பகோணம் பகுதியில் திருடப்பட்ட இரண்டு இருசக்கர வாகனங்கள் என என 4 இரண்டு சக்கர வாகனங்களை போலீசார் கைப்பற்றினார் மேலும் ஏதேனும் திருட்டு வழக்குகளில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
Next Story