வெண்ணந்தூர் அருகே ட்ரான்ஸ்பார்மிலிருந்து, 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒயர் காயில் திருடிய, 3 பேர் கைது
Rasipuram King 24x7 |18 Oct 2024 2:12 PM GMT
வெண்ணந்தூர் அருகே ட்ரான்ஸ்பார்மிலிருந்து, 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒயர் காயில் திருடிய, 3 பேர் கைது
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கீரனூர் நையாரா பெட்ரோல் பங்க் அருகே ட்ரான்ஸ்பார்ம் உள்ளது. இந்த ட்ரான்ஸ்பார்மில் இருந்து, ரூ.2 லட்சம் மதிப்பிலான ஒயர் காயில் திருடு போனது. இதுகுறித்து மின்வாரியம் சார்பில், வெண்ணந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து வெண்ணந்தூர் காவல் ஆய்வாளர் சுகவனம் அவர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இச்சம்பவம் தொடர்பாக, சேலம் மாவட்டம் அம்மணி கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த சரவணன், 43, நெத்திமேடு பகுதியைச் சேர்ந்த பிரசாத், 22, சீலநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த மணி, 46 ஆகியோர் ஒயர் காயிலை திருடியது தெரியவந்தது. இவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்ற விசாரணைக்கு பிறகு சேலம் சிறையில் அடைத்தனர்.
Next Story