ஈரோடு மாவட்டத்தில் வரும் 20-ம் தேதி கல்விக்கடன் முகாம்

ஈரோடு மாவட்டத்தில் வரும்  20-ம் தேதி கல்விக்கடன் முகாம்

மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கரா

Education loan camp on 20th in Erode district
ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் ஈரோடு மாவட்ட வங்கிகள் இணைந்து நடத்தும் மாபெரும் கல்விக்கடன் மேளவிற்கான பயிற்சிக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கரா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.அதில் ஈரோடு மாவட்டத்தில் வருகின்ற 20.11.2023 அன்று மாபெரும் வங்கி கல்வி கடனுதவி முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் அதிகளவிலான மாணவ, மாணவியர்கள் சுலந்து கொண்டு பயன்பெற வேண்டுமெனவும், அதற்கு முன்னதாக தற்போது கல்லூரிகளில் பயிலும் மானாவ, மாணவியர்களில் வங்கி கல்வி கடனுதவி தேவைப்படுபவர்களின் விபரங்களை அந்தந்த கல்லூரி நிர்வாகம் மற்றும் அதற்காக நியமிக்கப்பட்டுள்ள கல்லூரியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் முழுமையாகக் கண்டறியவதுடன் வித்யாலட்சுமி என்ற இணையதளம் (www.vidyalakshmi.co.in/ Students) மூலம் பதிவேற்றம் செய்வதுடன் இந்த இணையதளம் பற்றிய விழிப்புணர்வினை கல்லூரி மாணவ, மாணவியர்கள மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கும் தெரிவித்திட வேண்டும் என்றார். இதனை மாணவ, மாணவியர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.

Tags

Next Story