ரூ. 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை திறந்து வைத்தார் எம் எல் ஏ சிவகாமசுந்தரி.

ரூ. 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை திறந்து வைத்தார் எம் எல் ஏ சிவகாமசுந்தரி.

கரூரில் ரூ. 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை திறந்து வைத்தார் எம்.எல்.ஏ. சிவகாமசுந்தரி.

தமிழக அரசின் ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சி துறை சார்பில், கரூர் மாவட்டம்,தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, மூக்கணாங்குறிச்சி ஊராட்சியில் ரூ.20 லட்சம் நிதியில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தின் திறப்பு விழா நடைபெற்றது.

சமுதாயக் கூடத்தை எம்.எல்.ஏ. சிவகாமசுந்தரி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியை தொடர்ந்து சமுதாயக் கூட வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நட்டு வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தாந்தோணி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரகுநாதன், தாந்தோணி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சிவகாமி வேலுசாமி உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சமுதாய கூட திறப்பு விழாவை சிறப்பித்தனர்.

Tags

Next Story