தொடர் விடுமுறை விவேகானந்தர் மண்டபத்தை 20 ஆயிரம் பேர் பார்வை

தொடர் விடுமுறை விவேகானந்தர் மண்டபத்தை 20 ஆயிரம் பேர் பார்வை

தொடர் விடுமுறை காரணமாக விவேகானந்தர் மண்டபத்தை 20 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்.


தொடர் விடுமுறை காரணமாக விவேகானந்தர் மண்டபத்தை 20 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்.

கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள மற்றொரு பார்வையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டு வருகிறார்கள்.

இவற்றை பார்வையிட வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது. இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய மூன்று படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் படகு போக்குவரத்து தினமும் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை இடைவேளை இன்றி தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி முதல் பக்ரீத் பண்டிகையை ஒட்டி தொடர் விடுமுறை காரணமாக வழக்கத்தை விட அதிகமாக சுற்றுலா பயணிகள் படகில் பணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு உள்ளனர். அந்த வகையில் 15 ஆம் தேதி 7 ஆயிரம் பேரும் பேரும் ஞாயிற்றுக்கிழமை அன்று 16ஆம் தேதி 7 ஆயிரத்து 300 பேரும், பக்ரீத் பண்டிகையான 17ஆம் தேதி 6 ஆயிரத்து 300 பேர் என 20 ஆயிரத்து 600 பேர் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags

Next Story