ஆக. 20ல் பல்லக்காபாளையம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு மின் நிறுத்தம்

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக ஆக. 20ல் மின் நிறுத்தம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக ஆக. 20ல் மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. இது பற்றி பள்ளிபாளையம் மின் வாரிய செயற்பொறியாளர் செல்வம் தமது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக ஆக. 20ல் காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. வளையக்காரனூர், பல்லக்காபாளையம், ஆலத்தூர், புதுப்பாளையம், மலையடிபாளையம், மஞ்சுபாளையம், எக்ஸல் கல்லூரி, குமாரபாளையம் ஹைடெக் பார்க் மற்றும் காவேரி ஹைடெக் பார்க் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்
Next Story