வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி மே 20 ஆம் தேதி தொடங்குகிறது

X
அரியலூர்,மே 15 - அரியலூர் மாவட்டத்திலுள்ள வருவாய் கிராமங்களுக்கான 1434 ஆம் பசலி ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) மே 20 ஆம் தேதி தொடங்குகிறது என்று ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்தது: அரியலூர் வட்டத்தில் நடைபெறும் வருவாய் தீர்வாயத்துக்கு(ஜமாபந்தி) ஆட்சியர் தலைமை வகிக்கிறார். இதில், அரியலூர் உள்வட்டத்துக்குள்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் மே 20. நாகமங்கலம் உள் வட்டத்துக்குள் உட்பட்ட கிராமங்களுக்கு மே 21. கீழப்பழுவூர் உள்வட்டத்துக்குள் உட்பட்ட கிராமங்களுக்கு மே 22. திருமானூர் உள்வட்டத்துக்குள் உட்பட்ட கிராமங்களுக்கு மே 23. ஏலாக்குறிச்சி உள்வட்டத்துக்கு உள்பட்ட கிராமங்களுக்கு மே 27 ஆம் தேதிகளில் அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.உடையார்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில், அரியலூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மே 20 }இல் தா.பழூர் உள்வட்டத்துக்குள் உட்பட்ட கிராமங்களுக்கும், மே 21}இல் சுத்தமல்லி உள்வட்டத்துக்குள் உட்பட்ட கிராமங்களுக்கும், மே 22}இல் குண்டவெளி உள்வட்டத்துக்குள் உள்பட்ட கிராமங்களுக்கும், மே 23}இல் உடையார்பாளையம் உள்வட்டத்துக்குள் உட்பட்ட கிராமங்களுக்கும், மே 27}இல் ஜெயங்கொண்டம் உள்வட்டத்துக்கு உட்பட்ட கிராமங்களுக்கும் வருவாய் தீர்வாயம் நடைபெறுகிறது.செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் மே 20}இல் செந்துறை உள்வட்டத்துக்குள் உட்பட்ட கிராமங்களுக்கும், மே 21}இல் பொன்பரப்பி உள்வட்டத்துக்குள் உள்பட்ட கிராமங்களுக்கும், மே 22}இல் ஆர்.எஸ்.மாத்தூர் உள்வட்டத்துக்கு உட்பட்ட கிராமங்களுக்கும் வருவாய் தீர்வாயம் நடைபெறுகிறது.ஆண்டிமடம் வட்டாட்சியர் அலுவலகத்தில், உடையார்பாளைம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் மே 20}இல் ஆண்டிமடம் உள்வட்டத்துக்குள் உட்பட்ட கிராமங்களுக்கும், மே 21}இல் குவாகம் உள்வட்டத்துக்குள் உள்பட்ட கிராமங்களுக்கும் வருவாய் தீர்வாயம் நடைபெறுகிறது.எனவே, பொதுமக்கள் இந்த வருவாய் தீர்வாயத்தில், பட்டா மாறுதல், பெயர் மாறுதல், நில அளவை, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட தனிப்பட்ட கோரிக்கை, பிற துறைகள் சார்ந்த கோரிக்கைகள் மற்றும் பொதுவான கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறாலம்.
Next Story

