கடலூர் சிப்காட்டில் கழிவுநீர் டேங்க் வெடித்து விபத்து – 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி*

கடலூர் சிப்காட்டில் கழிவுநீர் டேங்க் வெடித்து விபத்து – 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி*
X
கடலூர் சிப்காட்டில் கழிவுநீர் டேங்க் வெடித்து விபத்து – 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரியலூர், மே15- கடலூர் மாவட்டம் முதுநகர் அருகே உள்ள சிப்காட்டில் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. முதுநகர் அருகே உள்ள குடிகாடு என்ற பகுதியில் தனியார் சாயத் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.இந்த நிறுவனத்தில் கழிவுநீரை சேமித்து வைத்து சுத்திகரிக்கும் சுமார் 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்க் ஒன்று உள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 2:30 மணி அளவில் அந்த டேங்க் பயங்கர சத்தத்துடன் திடீரென வெடித்துள்ளது. இதனால் நிறுவனத்தில் வேலை பார்த்த தொழிலாளர்கள் அலறி அடித்துக் வெளியே வந்தனர். இதில் 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மேலும் டேங்க் வெடித்த விபத்தில் தண்ணீர் வெளியேறி ஊருக்குள் புகுந்ததால் அங்கிருந்த வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story