குமரி : முதியவருக்கு 20 ஆண்டு சிறை 

குமரி :  முதியவருக்கு 20 ஆண்டு சிறை 
X
7 வயது சிறுமி பலாத்கார வழக்கு
குமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியை சேர்ந்தவர் இஸ்ரவேல் (67). தொழிலாளி. இவர் கடந்த 10 . 4 . 2019 அன்று 7 வயது சிறுமியை மாம்பழம் வாங்கி தருவதாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். மேலும் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி தாயாரிடம் கூறியுள்ளார். உடனடியாக 3 - 2 - 2020 அன்று கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இஸ்ரவேலை மகளிர் போலீஸ் சார் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.        இந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் நடந்து வந்தது. நீதிபதி சுந்தரையா நேற்று தீர்ப்பு கூறினார். தீர்ப்பில் இஸ்ரவேலுக்கு பல்வேறு பிரிவுகளில் 20 ஆண்டு சிறை தண்டனைகளும் ரூ.  5 ஆயிரம்  அபராதமும், சிறை தண்டனை எககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட சிறுமிக்கு இழப்பீடாக தமிழக அரசு 5 லட்சம் வழங்கவும், அதை சிறுமி பெயரில் வங்கியில் டெபாசிட் செய்யவும்  உத்தரவிட்டார்.
Next Story