சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை!

குற்றச் செய்திகள்
புதுக்கோட்டையை சேர்ந்தவர் பெரி யகருப்பன்(எ)சண்முகவேல். இவர் கடந்த 2022ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். இதுதொடர் பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் திருமயம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து போக்சோ சட்டத்தின் கீழ் சண்முக வேலை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை புதுக் கோட்டை மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி கனகராஜ் விசாரித்து குற்றம்சாட்டப்பட்ட சண்மு கவேலுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்ப ளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறு மிக்கு அரசின் சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும்உத்தரவிட்டார்.
Next Story