கூத்தாண்டகுப்பம் கிராமத்தில் எருது விடும் திருவிழா 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு...

கூத்தாண்டகுப்பம் கிராமத்தில்  எருது விடும் திருவிழா 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு...
X
கூத்தாண்டகுப்பம் கிராமத்தில் எருது விடும் திருவிழா 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு...
திருப்பத்தூர் மாவட்டம் கூத்தாண்டகுப்பம் கிராமத்தில் எருது விடும் திருவிழா 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு... சீரி பாய்ந்து ஓடி வெற்றி பெற்ற காளையின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ஹீரோ ஹோண்டா ஸ்ப்லெண்டர் பிளஸ் பரிசாக இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது... திருப்பத்தூர் மாவட்டம் கூத்தாண்டகுப்பம் கிராமத்தில் எருது விடும் திருவிழா நடைப்பெற்றது இதில் திருப்பத்தூர், நாட்றம்பள்ளி ஆலங்காயம், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, ஆம்பூர், மிட்டூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா மாநிலத்தில் இருந்தும் 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. காளைகள் மருத்துவ பரிசோதனை செய்து பின்னர் வாடி வாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன.. இதில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை குறுகிய நேரத்தில் சென்றடைந்த காளையின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ஹீரோ ஹோண்டா ஸ்ப்லெண்டர் பிளஸ் இருசக்கர வாகனமும் இரண்டாவது பரிசு ஹீரோ ஹோண்டா சிடி டீலக்ஸ் இருசக்கர வாகனம் மூன்றாவது பரிசாக டிவிஎஸ் சூப்பர் எக்ஸெல் ஹெவி டூட்டி இருசக்கர வாகனமும் மற்றும் எல்இடி டிவி பிரிட்ஜ் உள்ளிட்ட 63 பரிசுகள் வெற்றி பெற்ற காளையின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் எருது விடும் விழாவில் அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க பாதுகாப்பு பணிக்காக 150-க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு இருந்தன இந்த விழாவை காண சுற்றுவட்டார கிராமத்திலிருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள், மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர்... பாதுகாப்பையும் மீறி காளை மீது இளைஞர்கள் கை போட்ட நிலையில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.. என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story