கூத்தூர் தர்கா ஷரீபில் 200 ஆண்டுகளுக்கு மேலாக சாதி, மத பாகுபாடின்றி ஆயிரக்கணக்கான பொது மக்களுக்கு

ஆபத்து சோறு - கொரனாவை விரட்டியது - நிர்வாகி நம்பிக்கை
நாகை மாவட்டம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த கூத்தூர் - குருக்கத்தி பிரதான சாலையில், சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் அடக்கம் ஆன, பீர்காயபு ஒலியுல்லாஹ், சித்திக் முகம்மது ஷகீது ஒலியுல்லாஹ், ஜெர்மன் பீவி அம்மா ஒலியுல்லாஹ் ஆகியோரின் தர்ஹா ஷெரிப் அமைந்துள்ளது. 200 ஆண்டுகளுக்கு முன், காலரா பெரு நோய் தொற்று காலத்தில், பொது மக்களை தர்காவில் தங்க வைத்து, சோறு சமைத்து கொடுத்து நோயை விரட்டியதாக நம்பிக்கை உள்ளது. அதை தொடர்ந்து, பாரம்பரியமாக 200 ஆண்டுகளாக பொது மக்களிடம் உணவு பொருட்களை பெற்று, பொது மக்களுக்கு ஆபத்து மவுலுது எனப்படும் ஆபத்து சோறு வழங்கப்பட்டு வருகிறது. ரம்ஜான் நோன்பு ஆரம்பிக்கும் முன், நடைப்பெறும் இவ்விழா நேற்று நடைப்பெற்றது. இரவில் ஆடுகள் வெட்டப்பட்டு, 600 கிலோ அரிசி, 200 கிலோ ஆட்டுக்கறி, ஆயிரம் கிலோ காய்கறிகளுடன் சமைத்து, கறி சோறு சமைத்து மௌலுது ஷரீப் எனபடும் பிரார்த்தனை நடைப்பெற்று, அதிகாலை முதல் நாள் முழுவதும் கறி சோறு உணவு வழங்கப்பட்டது. இதில், சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த சாதி, மத பாகுபாடின்றி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் ஆபத்து சோறு என்னும் கறி சோறு சாப்பிட்டு சென்றனர். இது குறித்து தர்கா நிர்வாகி செய்யது சாகுல் ஹமீது கூறியதாவது ஆண்டு தோறும் நடைப்பெறும் ஆபத்து சோறு விழாவில், கறி சோற்றை பாத்திரங்களில் வைத்து வீடுகளுக்கு கொண்டு செல்ல கூடாது. நாள் முழுதும் மக்களுக்கு கறி சோறு போடுகிறோம். கொரோனா காலக்கட்டத்தில் இது போன்று ஆபத்து சோறு சமைத்து போட்டதால், தங்கள் கிராமங்களில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Next Story