ஆட்டோவில் கடத்திய 200 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்

ஆட்டோவில் கடத்திய 200 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
X
கன்னியாகுமரி
நித்திரவிளை சப் இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட் தலைமையிலான போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரள பதிவெண்  கொண்ட பயணிகள் ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது, 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 7 கேன்களில் 200 லிட்டர் மானிய விலை  மண்ணெண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது சம்பந்தமாக பொழியூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஏசுதாஸ் என்பவரை போலீசார் கைது செய்து, பறிமுதல் செய்த மண்ணெண்ணெய் மற்றும்  ஆட்டோவை நாகர்கோவில் புட்செல்  அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
Next Story