ராசிபுரத்தில் நில தரகர்களுக்கு நல வாரியம் ஏற்படுத்தி மாதம் தோறும் 2000 ரூபாய் வழங்க வேண்டும் மாநில தலைவர் கோரிக்கை..

ராசிபுரத்தில் நில தரகர்களுக்கு நல வாரியம் ஏற்படுத்தி மாதம் தோறும் 2000 ரூபாய் வழங்க வேண்டும் மாநில தலைவர் கோரிக்கை..
ராசிபுரத்தில் நில தரகர்களுக்கு நல வாரியம் ஏற்படுத்தி மாதம் தோறும் 2000 ரூபாய் வழங்க வேண்டும் மாநில தலைவர் கோரிக்கை..
ராசிபுரத்தில் நில தரகர்களுக்கு நல வாரியம் ஏற்படுத்தி மாதம் தோறும் 2000 ரூபாய் வழங்க வேண்டும் எனவும், பத்திரி எழுத்தாளர்களுக்கு லைசென்ஸ் வழங்குவது போல் நிலத் தரகர்களுக்கும் பதிவு எண் வழங்க வேண்டும் என மாநில தலைவர் அண்ணாதுரை தமிழக அரசுக்கு கோரிக்கை.. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுச்சத்திரம் தனியார் திருமண மண்டபத்தில் நில தரகரர்களுக்கான ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலத் தலைவர் அண்ணாதுரை கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி,நிர்வாகிகளை கருத்துக்களை கேட்டறிந்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசுகையில் நில தரகர்களுக்கு அங்கீகாரம் இல்லாததால் அரசு பதிவு துறையில் உரிமம் வழங்க வேண்டும் எனவும், அமைப்பு சாரா தொழிலாளர் நல பட்டியலில் இணைக்க கோரி உள்ளோம் என்பதாகவும் அதற்கான பணி தற்போது நடைபெற்று வருவதாக கூறினார்.. நிலத் தரகர்களுக்கு தனி நல வாரியம் ஏற்படுத்த வேண்டும்,பத்திர எழுத்தாளர்களுக்கு லைசன்ஸ் வழங்குவது போல் நில தரகரர்களுக்கும் பதிவு எண் வழங்க வேண்டும். மூத்த தலைவர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் மாதம்தோறும் 2000 ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்...
Next Story