ரூ 20,000 மதிப்புள்ள இரண்டு கிலோ கஞ்சாவை பதுக்கிய வாலிபர் கைது.
Karur King 24x7 |30 Sep 2024 1:00 PM GMT
ரூ 20,000 மதிப்புள்ள இரண்டு கிலோ கஞ்சாவை பதுக்கிய வாலிபர் கைது.
ரூ 20,000 மதிப்புள்ள இரண்டு கிலோ கஞ்சாவை பதுக்கிய வாலிபர் கைது. கரூர் மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக கரூர் காவல் உதவி ஆய்வாளர் நாகராஜனுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் செப்டம்பர் 29ஆம் தேதி மதியம் 2 மணி அளவில், கரூர் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சேலம் பேருந்துகள் நிறுத்தும் இடத்தில், கரூர் மாவட்டம், ஆத்தூர் பிரிவு, சுந்தரம் நகரை சேர்ந்த தியாகராஜன் மகன் சமரான் வயது 31 என்பவர் 2- கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே காவல்துறையினர் கஞ்சாவை பறிமுதல் செய்து, சமரானை கைது செய்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி,சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் கரூர் மாநகர காவல் துறையினர்.
Next Story