ராசிபுரம் நகராட்சியில் தூய்மையே எங்களின் சேவை 2024 நிகழ்ச்சியில் மருத்துவ முகாம்
Rasipuram King 24x7 |30 Sep 2024 11:46 AM GMT
ராசிபுரம் நகராட்சியில் தூய்மையே எங்களின் சேவை 2024 நிகழ்ச்சியில் மருத்துவ முகாம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியில் ஆணையாளர் கா. சேகர் ,அவர்கள் முன்னிலையில் நகரமன்ற தலைவர் முனைவர் திருமதி ஆர்.கவிதா சங்கர் அவர்கள் தலைமையில் தூய்மையே எங்களின் சேவை 2024 நிகழ்ச்சியின் அடிப்படையில் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இம் முகாமில் தூய்மை அலுவலர் மு. செல்வராஜ் , மருத்துவ அலுவலர் மருத்துவர் கா. செல்வி ,வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில் மருத்துவர்கள் ஜெயப்பிரகாஷ், கவின் குமார், மாதேஸ்வரி, தமிழ்ச்செல்வி, சிவகுமார், சரவணகுமார், பாலாமணி, மற்றும் மருத்துவ பணியாளர்கள் நகராட்சி அலுவலர்கள் தூய்மை பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story