தாராபுரத்தில் 2025 புத்தாண்டை யொட்டி மாவட்ட காவல்துறை சார்பில் கேக் வெட்டி கொண்டாடினர்.

தாராபுரத்தில் 2025 புத்தாண்டை யொட்டி மாவட்ட காவல்துறை சார்பில் கேக் வெட்டி கொண்டாடினர்.
X
தாராபுரத்தில் 2025 புத்தாண்டை யொட்டி மாவட்ட காவல்துறை சார்பில் கேக் வெட்டி கொண்டாட்டம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம்  காவல்துறை சார்பில் புத்தாண்டு வரவேற்கும் விதத்தில்  ஒட்டன்சத்திரம்- திருப்பூர் புறவழிச் சாலை தாராபுரம் உடுமலை ரவுண்டானாவில்  கேக் வெட்டி 2025 புத்தாண்டு வரவேற்று பொதுமக்கள் மற்றும் காவல் துறையினருக்கு வாழ்த்துக்களை பரிமாறி கொண்டார். மேலும் விபத்து இல்லாமல் வாகனத்தை இயக்குவது ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனங்களை ஓட்டுவது. மது குடித்துவிட்டு வாகனத்தை இயக்கக் கூடாது. வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கினர். இதில் தாராபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார்  காவல் ஆய்வாளர் விஜய சாரதி  ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர். மேலும் 2025 ஆம் ஆண்டு புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி ரோட்டரி மஹாலில் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பாட்டு கச்சேரி நிகழ்ச்சியில் பாடல்கள் பாடியும் ஒலி ஒளி அமைப்பு ஏற்றவாறு நடனமாடியும் 2025ஆம்  ஆண்டு புத்தாண்டை வரவேற்று குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடினார். அதேபோல 5 சாலை சந்திப்பில் உள்ள அருள்ஜோதி ஆசிரமத்தில் ஆதரவற்ற குழந்தைகளுடன் இசை கச்சேரி நடத்தி 2025 ஆம் ஆண்டு கேக் வெட்டி கொண்டாடினர்.  மேலும் தாராபுரம் அரசு மருத்துவமனை எதிரே உள்ள தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சரியாக 12 மணிக்கு விளக்குகளை எரியவிட்டு  ஸ்ட்ரக்சர்ரில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு கொடுத்து 2025 -ஆம் ஆண்டு வரவேற்றனர்.  இதேபோன்று எம்.எம். தனியார் மருத்துவமனை செவிலியர்கள் மருத்துவர்கள் மத்தாப்பு பிடித்து ஹேப்பி நியூ இயர் 2025-என நோயாளிகளுடன் புத்தாண்டை கொண்டாடினர்.
Next Story