முதலமைச்சர் மாநில இளைஞர் விருது-2025-க்கு தகுதியானவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

X
சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.1,00,000- ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும். அதன்படி, 2025ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது எதிர்வரும் 15.08.2025 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது. இவ்விருது தொடர்பாக கீழ்க்காணும் தகுதிகள் வரையுறுக்கப்பட்டுள்ளன. 1. 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண்/பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். கடந்த (01.04.2024) 2024 ஏப்ரல் 1ந் தேதி அன்று 15 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும் அல்லது (31.03.2025) மார்;ச் 31-ந் தேதி 2025 அன்று 35 வயதுக்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். 2. கடந்த நிதியாண்டில் (2024-2025) அதாவது 01.04.2024 முதல் 31.03.2025 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்;தில் கொள்ளப்படும். 3. விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்த பட்சம் 5வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும் ( சான்று இணைக்கப்பட வேண்டும்). 4. விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு, கண்டறியப்படக் கூடியதாகவும் அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். 5. ஒன்றிய /மாநிலஅரசுகள், பொது துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள்/ பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது. 6. விண்ணப்பதாரருக்கு உள்ளுர் சமுதாய மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். 7. இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 03.04.2025 முதல் கடைசி நாள் 03.05.2025 அன்று மாலை 4.00 மணி ஆகும். 8. விண்ணப்பதாரர்கள் தங்கள் மாவட்ட காவல் நிலையத்தில் இருந்து அன்னார்களுக்கு உள்ள நன்னடத்தை சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான www.sdat.tn.gov.in உள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல் வேண்டும். இவ்விருதிற்கு 03.05.2025 மாலை 4.00 மணிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
Next Story

