வணிகர்கள் பெரும் புள்ளி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் யாரை ஆட்சியில் அமரவைப்பது குறித்து நாம் சிந்தித்து செயல்பட வேண்டும்,
வணிகர்கள் பெரும் புள்ளி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் யாரை ஆட்சியில் அமரவைப்பது குறித்து நாம் சிந்தித்து செயல்பட வேண்டும், மத்திய, மாநில அரசுகளை நம்மிடம் கோரிக்கைகளை கேட்கும் படி வரும் தேர்தலை சந்திப்போம், ஆம்பூரில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேச்சு.. திருப்பத்தூர் மாவட்டம்.. ஆம்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், சமய நல்லிணக்க சமத்துவ பொங்கல் விழா நடைப்பெற்றது, இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பங்கேற்று, அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கினார், அதனை தொடர்ந்து விழாவில் பேசிய விக்கிரமராஜா, சமுதாய ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்கள், இந்திய நாடு விவசாயத்தையும், வணிகர்களையும் சார்ந்த நாடு, ஆனால் தற்போது கலாச்சாரங்கள் மாறி வருகிறது, நெற்பயிர்கள் இருந்த இடங்கள் எல்லாம் கட்டிடங்களாக மாறிக்கொண்டிருக்கின்றது, சாமானிய வணிகர்களை எல்லாம்,அப்புறப்படுத்தி ஆன்லைன், கார்ப்பரேட் வணிகம் என்று போய்க்கொண்டு இருக்கின்றது, இதற்காக தான் பிரதமரும்,முதலைச்சரும், சாமானிய வணிகர்களையும், விவசாயிகளையும் பாதுகாக்க, அரசு சிறப்பு பாதுகாப்பு சட்டம்,ஒன்றை இயற்றப்பட வேண்டும் என்பதை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கையாக வைக்கின்றது, இதுதான் காலத்தின் கட்டாயம், மத்திய அமைச்சர் பியஸ் கோயலுடன் பேசும்போது, தமிழ்நாட்டில், 10 லட்சம் வணிகர்கள் என்று கூறினோம், ஆனால் அவர் இந்திய முழுவதும் கணக்கிட்டு, 10 கோடி வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் புள்ளி விவரம் தந்துள்ளார், கொரோனா காலத்தில் உணவு கொடுத்தவர்கள், நம்முடைய சாமானிய வணிகர்கள் என்பதை எல்லோரும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும், உள்நாட்டு வணிகர்களை பாதுகாப்போம், வருகின்ற 42 ஆவது வணிகர் சங்க மாநில மாநாடு செங்கல்பட்டு அருகில் மதுராந்தகம் ஜி.எஸ்.டி சாலை பகுதியில் 57 ஏக்கரில் மாநாட்டு பணி தொடங்கி இருக்கின்றது, தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் மேற்க்கொண்டு வருகின்றோம், மேலும் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி அனைத்து அரசியல் கட்சிகளும் காய்நகர்த்தி கொண்டிருக்கின்றது, ஆகவே நம்முடைய வாக்கு என்பது பெரும்புள்ளி வாக்கு, யாரை ஆட்சியில் அமரவைக்க வேண்டுமோ, நாம் சிந்தித்து செயல்பட்டால் அவர்கள் தான் ஆட்சியில் அமரமுடியும், யாரை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று என்னுகிறோமோ, நாம் சிந்தித்து செயல்பட்டால், அவர்களை அகற்ற முடியும், நம்முடைய நிலைபாட்டை வணிகர் சங்க பெண்களும் எடுத்துக்கொண்டால், நம்முடைய கோரிக்கைகளை, மத்திய, மாநில அரசிடம் சென்று கெஞ்ச வேண்டிய நிலை இருக்காது, அவர்களே நம்மிடம் முன் வந்து,உங்களுக்கு என்ன தேவைகள் வேண்டும் என சொல்லுவார்கள், சொல்லக்கூடிய வாய்ப்பை, அனைவரும் உருவாக்க வேண்டும் என பேசினார்.. மேலும் இந்த நிகழ்ச்சியில் ஆம்பூர் அனைத்து சமுதாய மக்கள் மற்றும் வணிகர்கள் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story



